Saturday, July 30, 2022

Doremon in Tamil, Season 20,Episode 17

 

About This Episode (கதை விளக்கம்);

இந்த Episode,Episode 16 இன் தொடர்ச்சியாக காணப்படுகின்றது.அதனால Episode 16 பார்த்த பிறகு இதை பார்த்தால் உங்களுக்கு ரொம்பவே புரியும்.இந்த Episodeஎ இப்போ நாங்க கதையாக பார்க்கலாம்.இந்த Episode ஆறம்பிக்கும் போது ஒக்டோபஸ் என இளவரசி கூறியதற்கு Doraemon "என்னை முதல் தடவையாக நீங்க தான் ஒக்டோபஸ்னு கூப்பிட்டு இருக்கிங்க,உண்மையை சொல்ல வேண்டும்னா நா ஒரு பூனை ரோபோ." அதற்கு இளவரசி "பூனையா,ரோபோவா?" எனக் கேட்க  அதற்கு டோரிமான் "உங்களுக்கு புரிய வைப்பது ரொம்ப கஷ்டம்,என் பெயரு Doreamon,உங்களுக்கு ஏதாவது பிரச்சினையாக இருந்தால் என்னை அழையுங்கள்,நான் இங்க தான் இருப்பேன்." அதற்கு இளவரசி நன்றி கூற இருவரும் கடலை வெளியில் வந்தனர்.அப்போது இளவரசி அந்த மருந்தனை குடித்தாள்.அதற்கு Doraemon "இது சுவையாக இருக்கும்போல எனக்கும் அதை குடிக்கனும் போல ஆசையாக இருக்கிறது.இதை குடித்ததுக்கு அப்பறம் எனக்கு பெரிய கால்களும் வந்துடும். அப்போது இளவரசியின் வால் மறைந்து கால் வந்தது.அப்போது அந்த வழியே இளவரசர் குதிரையில் வந்தார்.அப்போது அவர் Doraemon வியப்பாக பார்த்தார்.அதற்கு Doraemon "நா ஒன்னு பூனையில்லை" இளவரசர் "அப்படினா நீ ஒரு மான்ஸடரா? ஓடாதே நில்லு" அதற்கு Doraemon "நீங்க என்னை தப்பாக புரிந்துட்டிங்க,நான் மிருகமெல்லாம் கிடையாது.இன்னும் சொல்லப்போனால் இந்த கதைக்கு அவங்க தான் கதாநாயகி." அப்போது இளவரசி "வாங்க இளவரசே!" அதற்கு அவர் "நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்."  அப்போது Doraemon "எல்லாம் நல்ல படியாக போயிட்டுருக்கு,கதையோட அடுத்த பகுதிக்கு போகலாம்." அப்போது இளவரசி "நான் இந்த பக்கமு வாரேன்,நீங்களும் வாங்க." என்று இருவரும் சந்தோசமாக இருந்தனர்.(தொடரும்) 


(தொடர்ந்து) அப்போது Doraemon "இருவரும் ஒன்னாக சந்தோசமாக இருந்தாங்க(டோரிமான் கதையை விட்டு வெளியே வந்தான்) இனிமேல் எல்லாம நல்லபடியாக தான் நடக்கும்,பாக்கலாம் என்ன நடக்க போகுதோ!,அந்த கடல்கன்னி ஆசைப்பட்டது போல நடக்காம அவங்க கடலோட கடலாக நுரையாக கலந்தாங்க,என்னது எதிவுமே மாறவில்லையா? இப்போ தான் அந்த கடல்கன்னியால பேச முடியுமே! ஏன் எதுவுமே மாறவில்லை.இப்போ நான் ஏதாவது பன்னியே ஆக வேண்டும்." அப்போது Doraemon கதை உள்ளே மீண்டும் சென்றான்.அப்போது டோரிமான் "என்ன சொல்லுரீங்க,இளவரசரும் பக்கத்து இராச்சிய இளவரசியும் கல்யாணப்பன்னிக்க போறாங்களா? நா ஒரு யோசனை சொல்லவா? அவரு கடல்ல விழுந்தப்போ நீங்க தான் காப்பாத்துனீங்கனு சொல்லிடலாம்ல." அதற்கு அந்த இளவரசி "சொல்லலாம் ஆனால்" என்று தயங்க அதற்கு Doraemon "உங்களால தான் இப்போது வாய திறந்து பேசலாம்ல  நீங்களே போய் அவர்கிட்ட சொலுலுங்க." அப்போது டோரிமான் இளவரியை கூட்டிட்டு ஓடினான்.அப்போது இளவரசி "என்னை எங்க கூட்டிட்டு போறாய்? என்னது இளவரசை பார்க்கவா?" அப்போது Doraemon இளவரசரிடம் "உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக் கொள்ரீங்க?

நா சொல்வதை கவனமாக கேழுங்கள்,நீங்கள் கடல்ல விழுந்தப்போ இவங்க தான் உங்களை காப்பாத்துனாங்க,நடந்தது என்னனு தெரியாம நீங்களா ஒன்னு கற்பனை பன்னிக்காதீங்க.அவ்வளவு புயலிலும் இவங்க உங்களை கஷ்டப்பட்டு காப்பாத்தினாங்க." அதற்கு இளவரசர்" எனக்கு க்துவும் ஞாபகம் இல்லை." அப்போது Doraemon "அமைதியாக இருக்காமல் வாயை திறந்து பேசுங்கள்,அது மட்டும் இல்லை அவங்க கடல் கன்னியாக இருந்தால் 300 வருடங்களுக்கு மேல வாழ்ந்திருப்பாங்க,உங்களுக்காக தான் மாறுனாங்க. அதுவும் உங்களுக்காக தான் ஒரு சாதாரண மனிதனாக மாறுனாங்க.நீ பேசுங்க இந்த இளவரசரை காப்பாத்துனது நீங்க தான் என்று வாயை திறந்து சொல்லுங்க." அதற்கு இளவரசி "அந்த புயல்ல இருந்து" என்று சொல்லும் போது இராச்சிய இளவரசி வந்து "இளவரசரை புயல்ல இருந்து காப்பத்துனது நான் தான,யாரோ எங்கிருந்தோ வந்து சொல்லால் நம்பிடுவீங்களா? கடல்ல இருந்து நான் அவரை தூக்கிட்டு போய் அவரை கவனமாக பாத்துகிட்டேன்.அவருக்கு தினமும் உணவு கொடுத்ததேன்.கடல்ல இருந்து நான் தான் காப்பாத்துனேன்." Doraemon "அது உண்மை கிடையாது" அப்போது இராசியான இளவரசி "இந்த பூனை சொல்வது உண்மை கிடையாது,இந்த பூனையை உடனடியாக சிறையில் அடையுங்கள்." 

அப்போது Doraemon "நான் பூனை இல்லை,அந்த இளவரசி பாவும் அந்த இளவரசியை எதிர்காலத்தில் இருந்து காப்பற்ற தான் நான் இப்படியெல்லாம் செய்கின்றேன்.எங்க போறிங்க போக வேண்டாம்,நில்லுங்க." அப்போது இருவரும் வெளியில் வந்தனர்.அப்போது Doraemon "ஏன் பாதியில வந்தீங்க,ஒரு வஷயத்தை பாதியில் கை விடுவது ரொம்ப தப்பு,நீங்க தான் அந்த இளவரசரை காப்பாத்துனதுனு சொலுவது ரொம்பே முக்கியம்.நாங்க வாய் விட்டு பேசுமா தானே நமக்குள்ள இருக்கும் உணர்வுகளை அவங்க பிரிந்திக் கொள்ள முடியும்.சரி வாங்க நாங்க வேணும்னா அந்த இளவரசரை பார்த்து மீண்டும் பேசலாம்." அதற்கு இளவரசி "நல்ல யோசனை தான்,நீங்க சொன்னது தான் சரிநாங்க போய் இளவரசரை பார்த்து பேசலாம்." அதற்கு Doraemon "அப்படி போடுங்க,நாங்க இளவரசரை பார்த்து" என்று பேசும் போது இளவரசி "இல்லை வேண்டும்,எனக்கு அவர் கிடைக்கலனாலும் பருவாயில்லை,அது பற்றி எனக்கு கவலையில்லை." Doraemon "இல்லை இது ரொம்ப தப்பு,நீங்க அப்படி பன்னலனா நீங்கள் கடலோட கடலாக போயிடுவீங்க,அதுக்கு அப்பறம் பெசுக்கோ மீண்டும் அழுவாள்,அப்பறம் என்னோட அம்மா என்ன திட்டுவாங்க." அதற்கு இளவரசி "எனக்கு வேற ஒருத்தரை தான் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.அந்த இளவரசை விட எனக்கு வேற ஒருத்தனை ரொம்ப பிடித்திருக்கிறது." 

அதற்கு Doraemon "என்ன சொல்ரீங்க? ஆனால் இதுவும் நல்லா தான் இருக்கிறது.கதைக்கு ஒரு சந்தோசமான முடிவிருந்தாலே போதுமே,அவராக தான் இருக்கனும்னு கிடையாது,கடல் கன்னிக்கு வேற யாரயாவது பிடித்திருந்தால் அவங்க கூடயே அவங்க சந்தோசமாக இருப்பாங்களே! இந்த கதை சோகமாக முடியாத வரைக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது,பெசுக்கோவும் அழுகையை நிறுத்திடுவாள்.எல்லாமே நல்ல படியாக முடியும்." என்று நினைக்கும் போது இளவரசி "எனக்கு பிரச்சினை என்று வரும்போது அவர்தான் எனக்கு உதவி பன்ன வந்தாரு,இவரால தான் எனக்கு கால்களும் கிடைத்தது." அதற்கு Doraemon "சரி சரி மேல சொல்லுங்க,எனக்கு பொறுமை கொஞ்சம் குறைவு" அதற்கு இளவரசி "ஆனால் ஒரு நீல ஒக்டோபஸ்கிட்ட நான் என்ன சொல்வதுனு புரியல." அதற்கு Doraemon "அப்படியா? நீல ஒக்டோபஸா உங்களுக்கு யார பிடிக்குமோ அவங்க கிட்ட போய் உண்மையை சொல்லுங்க அவ்வளவு தான்." அதற்கு இளவரசி "டோரிமான் நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லால் தப்பாக நினைக்க மாட்டிங்களே! நீங்க என் கூட நண்பனாக இருப்பிங்களா? நாங்க இரண்டு பேரும் இப்படியே எப்பயும் சந்தோசமாக இருக்கலாம்." அதற்கு Doraemon "அப்படினா அந்த நீல ஒக்டோபஸ்னு சொன்னது என்ன தானா? என்னது இதுக்கு எப்படி முடியாதுனு சொல்லாம இருக்குறது? உங்களுக்கு இப்படியெல்லாம் எப்படி தோனுது?" அதற்கு இளவரசி "நீங்க தானே சொல்லிட்டு இருந்தீங்க! நாங்க வாயை திறந்து பேசினாள் தான் நம்ம உணர்வுகளை புரிய வைக்க முடியும்.அதனால தான் நான் தைரியாமாக உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்." 

அதற்கு Doraemon "இந்த மாதிரி ஒரு அழகான பொண்ணு கிடைத்தா யார் தான் வேணாம்னு சொல்லுவாங்க? வேண்டாம்,நான் ஒரு பூனை போல உள்ள ரோபோட்,நீங்க சாதாரண மனிதனை கல்யாணப் பன்னினாள் தான் உங்களால இந்த பூமியில உயிர் வாழ முடியும்." அதற்கு "சரி நான் கடலோட கடலாக கலப்பதில் எனக்கு கவலையில்லை.டோரிமான் எனக்கு உங்களைதான் ரொம்ப பிடித்திருக்கிறது." அதற்கு Doraemon "இல்லை இப்படி நடக்க்கூடாது,பெசுக்கோ அழுவதை நிறுத்த மாட்டாள்,ஒழுங்காக அந்த இளவரசனை போயு கல்யாணம் பன்னுங்க." அதற்கு இளவரசி "உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா? அப்படியாக இருந்தால் நான் இப்போது கடலோட கடலாகவை கலக்கப் போறேன்." அதற்கு Doraemon "உங்களுக்கு எப்படி புரிய வைப்பதுனே புரியவில்லை,நீங்க இளவரசர் கூட வாழ வேண்டும்." அதற்கு இளவரசி "நான் இங்க இருக்க மாட்டேன்,அந்த இளவரசர் கூடதான் வேற ஒரு இளவரசி கூட கல்யாணம் நடக்க போகுதே! நான் வெறும் கடல்கன்னி தானே!" அப்போது Doraemon "புரிந்துவிட்டது,முதல்ல அந்த இளவரசியை ஏதாவது பன்ன வேண்டும்.(கதையை விட்டு வெளியே வந்து) முதல்ல இந்த கதையை படித்து பார்க்கலாம்.அப்போ இளவரசனை எங்க காப்பாத்துனாங்கனு புரியும்,இதோ இங்க தான்." கதையுனுள் மீண்டும் சென்றான்.அப்போது இளவரசர் மிதந்துகிட்டு இருந்தார்.அப்போது அங்கிருந்தவர்கள் இளவரசனை காப்பாற்றினர்.அப்போது இராச்சிய இளவரசி "கண்னை திறந்து பாருங்கள் இளவரசே! " 

அப்போது டோரிமான் ஒரு டிவைசை எடுத்து "இது தான் கட் கட் அதிசய பூனை" அப்போது அந்த பூனை கட் கட் என கூறியதும் அங்கிருந்த அனைத்து கப்பல்களும் ஒரு இடத்தில் கூடியது. அப்போது அனைவரும் இளவரசனை காப்பாற்ற சென்றனர்.அப்போது இளவரசர் கண்ணை திறக்கும் போது அங்கு இருந்த அனைவரும் "நாங்க தான் உங்களை காப்பாற்றினோம்" என்று சொல்ல இளவரசர் அதற்கு நன்றி கூறினார்.அதற்கு Doraemon "என்னோட வேலை முடிந்து விட்டது,பக்கத்து இராச்சியத்தை சேர்ந்த இளவரசி தான் இவங்களை காப்பாற்றுனாங்கனு சொன்னால் இவங்கள நம்ப மாட்டாரு,இப்போ அந்த கடல்கன்னிய எப்படியாவது மனது விட்டு பேச வைக்கனும்,அது தான் பெரிய விஷயமே!" அப்போது இருவரும் சந்தோசமாக இருந்தனர்.அப்போது டோரிமான் வந்து இளவரியின் முகத்தில் ஒரு வானோலியை ஒட்டினான்.அப்போது அந்த வானொலி "இளவரசரே அன்று அந்த பெரிய புயல்ல இருந்து நான் தான் உங்களை கஷ்டப்பட்டு காப்பாத்துனேன்." என்று கூற அதற்கு இளவரசர் "நீ உண்மையாகவா சொல்றே! ஆமா! இப்போ தான் எனக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வருது நீ தான் என்னை காப்பாற்றுனே.உன் உதவியை எப்போதும் நான் மறக்க மாட்டேன்என் கூட நட்பாக இருப்பியா?" அதற்கு இளவரசி "கண்டிப்பாக" என்று சொன்னதும் Doreamon கதையை விட்டு வெளியே வந்து விட்டான்.அதன் பிறகு Doraemon "ஒரு வழியாக எல்லாம நல்ல படியா முடிந்து விட்டது,ஒரு வழியாக இந்த கதைக்கு சந்தோசமான முடிவு கிடைத்து விட்டது.மெசுக்கோ எங்கிருக்கே? உனக்கு வேற ஒரு கதை படித்துக் காட்டுறேன் வா" அப்போது பெசுக்கோ "இல்ல டோரிமான் எனக்கு வேண்டாம்." அதற்கு Doraemon "இது ரொம்பவே வினோதமாக இருக்கும்,வா நான் கதை படிக்கிறேன் நீ கேளு." அப்போது பெசுக்கோ "ஆனால் எனக்கு நோபிடா அண்ணா சொல்ற கதை தான் பிடிக்கும்." அப்போது நோபிடா "என்னது,அதெல்லாம் என்னால முடியாது,வேற வழி இல்லை கொடு நானே வாசிக்கிறேன்." அதற்கு டோரிமான் "நீ கவலைப்படாதே! 

இந்த கதையை கேட்டா கண்டிப்பாக பெசுக்கோ சிரித்துக் கொண்டே போவாள்." அப்போது நோபிடா பெசுக்கோவிடம் "இங்கப்பாரு,இது வெறும் கதை மட்டும் தான்,இதை கேட்டுவிட்டு நீ அழக்கூடாது,கண்டிப்பாக அழமாட்டல" அப்போது பெசுக்கோ "சரி கண்டிப்பாக நான் அழமாட்டேன்." அப்போது நோபிடா கதையை படிக்க ஆரம்பித்தான்."கடல்ல ஒரு சின்ன கடல் கன்னி இருந்தாங்கலாம். அங்கிருந்த மந்திரவாதிகிட்ட அவங்களுக்கு கால்கள் வேண்டுமென கேட்டாங்களாம்,என்னது  அதுக்கு அப்பறம் அந்த கடல் கன்னி இளவரசனை காப்பாற்றுன கதையை அவங்க கிட்ட சொன்னாங்க,அதுக்கு அப்பறம் அவங்க இரண்டு பேரும் சந்தோசமாக வாழ்ந்தாங்க.இங்க என்ன நடக்குது? இந்த கதை இப்படி சந்தோசமாக முடியுமா என்ன? ஆனால் சோகமாக முடிவதை விட இது ரொம்ப பரவாயில்லை.(அப்போது பெசுக்கோ அழுதுக் கொண்டிருந்தாள்) அடே இப்போ என்னத்துக்கு அழுகின்ற? இந்த கதை சந்தோசமாக தானே முடிந்திருக்கிறது அப்பறம் ஏன் அழுகின்றே?" அதற்கு பெசுக்கோ "அந்த கடல் கன்னி அழுதாங்கனு சொல்லும் போதே நான் அழ ஆரம்பித்து விட்டேன்." அப்போது நோபிடா அம்மா வந்து நோபிடாவை திட்டினார்கள்.அப்போது Doraemon "நம்ம நோபிடாக்கு மட்டும் எப்போது சந்தோசமான முடிவு கிடையாது" என்று சொன்னதும் இந்த Episode முடிந்தது.நாளைக்கு இன்னொரு  புதிய Episodeல சந்திப்போம்.

1 comment: